கேட்சை பிடிக்கும்போது மோதிக்கொண்ட ஜடேஜா, சுப்மான் கில்..!

இன்று மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கேட்சை பிடிக்கும்போது சுப்மேன் கில், ஜடேஜா மோதிக்கொண்டனர்.

இன்று டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெயின் முதலில் பேட்டிங் தேர்வு செய்ததை அடுத்து ஆஸ்திரேலிய பேட்டிங் செய்தது. இந்நிலையில், முதல் இன்னிங்ஸின் 13 வது ஓவரில் அஸ்வின் வீசிய பந்தை வேகமாக தொடக்க வீரர் மத்தேயு வேட் தூக்கி அடித்தார். அப்போது, ஜடேஜா மற்றும் கில் இருவரும் கேட்ச் பிடிக்க முயற்சி செய்தபோது அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டர் ஜடேஜா கடைசியாக கேட்சை பிடித்தார்.

அப்போது, சுப்மேன் கில், ஜடேஜா மீது மோதி கீழே விழுந்தார். இதனால், மத்தேயு வேட் 30 ரன்னில் வெளியேறினார். இது இந்தியா அணிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இறுதியாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 72.3 ஓவரில் 195 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

பின்னர், இந்திய அணி களமிறங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 11 ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 36 ரன்கள் எடுத்து உள்ளனர்.

author avatar
murugan