இன்று மூன்றாவது ஒருநாள்:தொடரைவெல்லுமா இந்திய அணி !!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே  இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே  5 போட்டிகள் கொண்ட  ஒருநாள் தொடரில் இரண்டாவது போட்டி  நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 324 ரன்கள் அடித்தது.

இதன் பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி ஆட்டத்தை 234 ரன்களுடன் 10 விக்கெட்டை இழந்து முடித்துக்கொண்டது.இதன்மூலம் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய அணி.

இந்நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.இந்த  போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் நிலையில்  5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிடும்.

 

Leave a Comment