ஊரே பத்தி எரியும் போது கூட இவிங்களுக்கு இதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ்!

விஜய் மற்றும் அஜித் இருவரும் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்கள். இவர்கள் இருவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் தான். இதனையடுத்து, இவர்கள் இருவரின் ரசிகர்களும் ட்வீட்டரில் மாற்றி, மாற்றி மோசமான டேக்குகளை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ட்வீட்டரில் #மே1அஜித்துக்குபாடைக்கட்டு, #june22blackdayforvijay போன்ற டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதுகுறித்து, நடிகை கஸ்தூரி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அஜித்தும் விஜய்யும் எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும். இருப்பாங்க. வெட்டி பயலுங்க சாபத்துனால அவங்களுக்கு ஆபத்து இல்லை; ஆனா அவமானம் . ஊரே பத்தி எரியும் போது கூட இவிங்களுக்கு இதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ்.’ என பதிவிட்டுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.