இப்படி ஒரு ஒட்டப்பந்தயமா? ஜெர்மனியில் நடைபெற்ற வினோதமான ஓட்டப்பந்தயம்!

இன்று பல நாடுகளில் வித்தியாசமான முறையில் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜெர்மனியில் ஒரு ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அந்த ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவர்கள் பீர் அருந்திக் கொண்டே ஓட வேண்டும்.

ஜெர்மனியின், பெர்லின் நகரில் நடைபெற்ற இந்த வினோதமான ஓட்டப்பந்தயத்தில், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ள இளைஞர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் பயன்படுத்திய பீரில், 5 சதவீதம் மட்டுமே மது கலந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வினோதமான ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் இந்த போட்டி குறித்து கூறுகையில், பீரை அருந்திய பிறகு ஓடுவது சவாலாக இருந்ததாக கூறியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.