காலக்கெடு என்பது கண்துடைப்பு தானா? – சு.வெங்கடேசன் எம்.பி

கல்வி அமைச்சக வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகிறதா என்பதை சமூக நீதி அமைச்சகம் கண்காணிக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். 

இடஒதுக்கீட்டு காலி இடங்களை நிரப்ப அரசு சொன்ன ஓராண்டு கெடு முடிந்தது. ஆனால் ஐ.ஐ.டி / மத்திய பல்கலைக் கழக பேராசிரியர் பணி நியமனத்தில் 1400 க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படவில்லை என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட் செய்துள்ளார்.

மேலும், மத்திய பல்கலைக்கழகங்கள் 20 % இடங்களை கூட நிரப்பவில்லை. காலக்கெடு என்பது கண்துடைப்பு தானா? உயர்கல்வி நிலையங்களின் தன்னாட்சி அரசியல் சட்டத்தை விஞ்சியதா? இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். கல்வி அமைச்சக வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகிறதா என்பதை சமூக நீதி அமைச்சகம் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment