காதலை கலவரமாக்கிய வனிதா? சுயநலவாதியாக செயல்படும் லொஸ்லியா! திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வனிதா விஜயகுமார் வந்துள்ளார். வந்த முதல் நாளே அமர்க்களமாக களமிறங்கிய வனிதா, இன்று பல கலவரங்களை தூண்டி வீட்டுக் கொண்டு இருக்கிறார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வனிதா, அபிராமியின் காதலுக்கு வேட்டு வைக்கும் வகையில், முகனின் காதல் குறித்தும், அவரது காதலி குறித்தும், அபிராமியிடம் சொல்லி, இருவருக்கும் இடையே கலவரத்தை தூண்டி விட்டுள்ளார்.

பிக்பாஸ் வீடே ரணகளமாக மாறிய நிலையில், அனைவரும் அபிராமி மற்றும் கவினுக்கு இடையே சண்டை வராமல் தடுத்து நிறுத்துகின்றனர். ஆனால், லொஸ்லியா மட்டும், என்ன நடந்த நமக்கென்ன என்றவாறு அதனை அமர்ந்திருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார். இதனை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள், சமூகவலைத்தளங்களில் லொஸ்லியாவை திட்டித்தீர்த்து வருகினறனர்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.