ஹர ஹர மஹாதேவி மற்றும் இருட்டு அறையில் முரட்டு என்ற இரு அடால்ட் படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயகுமார்.ஆனால் இப்போது தனது பெயரை சாண்டி என மாற்றி கொண்டுள்ளார்.
இந்த இரு படங்களில் ஹீரோவாக நடித்த கௌதம் கார்த்திக்கை வைத்து தனி ஒருவன் படத்தின் தீமை தான் வெல்லும் என்ற பாடலின் முதல் வரியை தலைப்பாக வைத்து உள்ளார்.இன்னும் ஆரம்பிக்கப்படாத இப்படத்திற்கு முன் இவரது இயக்கத்தில் தற்போது பார்த்து பல்லுபடாமல் என்ற ஆபாச படம் திரைக்கு வர உள்ளது.
இவருடைய இரு படங்களின் தலைப்புகளும் படு சர்ச்சைகளை கிளப்பிய நிலையில் தற்போது இந்த தலைப்பும் விவாத பொருளாக மாறியுள்ளது.