#IPL2022: டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு..!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 22ஆவது போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. மும்பையில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

விளையாடும் வீரர்கள்:

சென்னை அணி:

ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா(கேப்டன்), எம்எஸ் தோனி(விக்கெட் கீப்பர்), டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி.

பெங்களூரு அணி:

ஃபாஃப் டு பிளெசிஸ்(கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ், சுயாஷ் பிரபுதேசாய், ஆகாஷ் தீப்.