#IPL2022: டாஸ் வென்ற சென்னை.. முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை இந்தியன்ஸ்?

இன்று நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 33-வது போட்டி, ரசிகர்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான போட்டியாகும். அதன்படி இன்று ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது. மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் இந்த போட்டி தொடங்கவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், டேனியல் சாம்ஸ், ரித்திக் ஷோக்கீன், ரிலே மெரிடித், ஜெய்தேவ் உனத்கட், ஜஸ்பிரித் பும்ரா ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), MS தோனி (விக்கெட் கீப்பர்), டுவைன் பிரிட்டோரியஸ், டுவைன் பிராவோ, மிட்செல் சான்ட்னர், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.