அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மிக பெரிய பெருமை… சர்வதேச ஒலிம்பியாட்டில் தமிழக அரசு செய்த செயல்.!

பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்களை அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் வரவேற்று அரங்கத்தினுள் அழைத்து வந்தனர். 

44வது சர்வதேச ஒலிம்பியாட்  செஸ் போட்டி இன்று ப்ரமாண்டமாக தொடங்கியுள்ளது. இதன் துவக்க விழா தற்போது நடைபெற்று வருகிறது.

இதில், பிரதமர் நரேந்திர மோடி,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என உச்ச பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் கலந்து கலந்து கொள்ள அரங்கத்தில் நுழைந்தனர். அவர்களை அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் வரவேற்று அரங்கத்தினுள் அழைத்து வந்தனர்.

அதாவது, பள்ளிகளில் செஸ் போட்டிகளில் விளையாடி பதக்கங்கள் வென்ற அரசு பள்ளி மாணவர்கள் தான் சரவதேச வீரர்களை வரவேற்று வந்தனர். இந்த பெருமைமிகு ஏற்பாட்டை தமிழக அரசு செய்ததற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment