உலகநாயகன் குரல் பதிவில் தமிழர்களின் பண்டையகால வரலாறு… மிரள வைத்த தமிழக அரசு.! 

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் குரல் பதிவில், தமிழர்களின் பண்டைய கால வரலாற்றை மிக அற்புதமாக கூறி வருகின்றார்.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா இன்று சென்னையில் கோலாலமாக தொடங்கியுள்ளது. இதில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பலர் கலந்துகொண்டு உள்ளனர்.

இதில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு நிகழ்வு, உலகநாயகன் கமல்ஹாசன் குரல் பதிவில், தமிழர்களின் பண்டைய கால வரலாற்றை மிக அற்புதமாக கூறி வருகின்றார்.

அதில், நமது பண்டைய மன்னர்கள் , சோழர்கள், சேரர்கள், பாண்டிய மன்னர்கள் குறித்த வரலாறு, ஜல்லிக்கட்டு, கல்லணை என கமல் குரல் ஆங்கிலத்தில் பிரமாண்டமாய் ஒலிக்க, அதற்கேற்றாற் போல நடன கலைஞர்கள் அற்புதமாக நடனமாடி, நடித்து காட்டி அதற்கேற்ற திரை அமைப்பு செய்து மிரட்டலாக பண்டைய வரலாறு உலகுக்கு பகிரப்பட்டு வருகிறது.

Leave a Comment