#IndvsWI: ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா இந்தியா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…இன்று 3வது ஒருநாள் போட்டி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஒயிட் வாஷ் செய்யுமா இந்தியா.

வெஸ்ட் இண்டீஸ்க்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.

இப்போட்டியில், 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி மற்றொரு வெற்றியை பதிவு செய்து, மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில், இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது இந்தியா. குயின்ஸ் பார்க் ஓவல், போர்ட் ஆஃப் ஸ்பெயின், டிரினிடாட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இன்று நடைபெறும் கடைசி போட்டியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா இந்தியா என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்தியா ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டதால், கடைசி போட்டியில் தோற்றாலும் பிரச்சினை இல்லை. இதனால் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது போட்டியிலும் இந்திய வெற்றி பெற்று விட்டால் ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி அணியை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்துவிடும். அப்படி நடந்தால், மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் அந்த அணியை இந்தியா முதல்முறையாக ஒயிட் வாஸ் செய்த பெருமையை பெறும் இதற்கு முன்பு ஒருமுறைகூட அங்கு இந்தியா ஒயிட் வாஷ் செய்ததில்லை. தற்போது, அதற்கான வாய்ப்பு உள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment