INDvsBAN TestSeries: இந்தியா நிதான ஆட்டம்! 2-வது செஷன் முடிவில் 174/4 ரன்கள் குவிப்பு.!

இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் முதல் நாளில் தேனீர் இடைவேளையின் போது இந்தியா 174/4 ரன்கள் குவிப்பு.

இன்று தொடங்கியுள்ள இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 85 ரன்கள் குவித்திருந்தது. ரிஷப் பந்த் 29 ரன்களும், புஜாரா 12 ரன்களும் எடுத்திருந்தனர்.

தொடர்ந்து விளையாடிய ரிஷப் பந்த், 46 ரன்கள் எடுத்த போது மெஹதி ஹசன் வீசிய பந்தில் போல்டானார், பந்த் 6 போர்கள் மற்றும் 2 சிக்ஸருடன் 46 ரன்கள் குவித்திருந்தார். புஜாரா-ரிஷப் பந்த் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் குவித்தனர். அதன்பிறகு களமிறங்கிய ஹரேயஸ் ஐயர், புஜாராவுடன் சேர்ந்து நிதானமாக ஆடி வருகின்றனர்.

முதல்நாள் தேநீர் இடைவேளையின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து 174 ரன்கள் குவித்துள்ளது. புஜாரா 42 ரன்களும், ஹரேயஸ் ஐயர் 41 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.

author avatar
Muthu Kumar

Leave a Comment