#INDvENG: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து அணி, தற்பொழுது 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

இந்தநிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதல் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணி வீரர்கள்:

ரோஹித் சர்மா, சுப்மான் கில்,  புஜாரா, விராட் கோலி (கேப்டன் ),  ரஹானே, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஆக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணி வீரர்கள்:

ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிபிலி, டேனியல் லாரன்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஒல்லி போப், பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், ஆலி ஸ்டோன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், பும்ரா, ஷாபாஸ் நதீம் ஆகியோர் நீக்க பட்டு அவர்களுக்கு பதிலாக  ஆக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கபப்ட்டுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக முதல் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய போட்டியை காண 15,000 ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி முன்னிலையில் இருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்தியா பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 

author avatar
murugan