இந்தியாவின் மிகத்தூய்மையான நகரமாக 4-வது ஆண்டாக ம.பியின் இந்தூர் நகரம் தேர்வு!

இந்தியாவின் தூய்மையான நகரமாக நான்காவது ஆண்டாக மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வருடம் தோறும் இந்தியாவில் தூய்மையான நகரம் எது என தேர்வுகள் நடப்பது வழக்கம். இந்நிலையில், இந்த வருடம் நடைபெற்ற தூய்மையான நகர தேர்வில் இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரமாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக நாட்டின் தூய்மையான நகரமாக இந்தூர் நகரம் தான் தேர்வு செய்யப்பட்டு கொண்டுள்ளது. இரண்டாவது தூய்மையான நகரமாக குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரமும், மூன்றாவது தூய்மையான நகரமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பை எனும் நகரும் இடம் பிடித்துள்ளது.
author avatar
Rebekal