போர்ச்சுகலில் இந்தியர்கள் – பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், போர்ச்சுகலில் பணிபுரிய இந்தியர்களை அனுப்பும் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்.

போர்ச்சுகலில் இந்தியர்களை பணியமர்த்துவதற்கு இந்தியா, போர்ச்சுகல் இடையே ஒப்பந்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்பந்தம் ஏற்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்திய பணியாளர்களை போர்ச்சுகல் அனுப்பவும், அங்கிருந்து பணியாளர்களை ஏற்கவும் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. இந்த புதிய ஒப்பந்தம் திறமையான இந்திய தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் என்று கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்