பல தடைகளை தாண்டி மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பு துவக்கம்!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள, இந்தியன்-2 திரைப்படமானது பல பிரச்சனைகளின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும், இயக்குனர் சங்கருக்கும் பட்ஜெட் விவகாரத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், லைகா நிறுவனத்துக்கும், இயக்குனர் சங்கருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதையடுத்து, மீண்டும் லைகா நிறுவனமே இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாத இறுதியில் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment