தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பேசினால் நன்றாக இருக்கும்- முதலமைச்சர் பழனிச்சாமி

தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பேசினால் நன்றாக இருக்கும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசன் பேசியது கடந்த சில நாட்களாக கடும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக மதுரையில் முதலமைச்சர் பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,நீதிமன்றம் தெரிவித்துள்ளதால் கமல் பேச்சு குறித்து பேச விரும்பவில்லை.அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பேசினால் நன்றாக இருக்கும்.

அண்ணா பல்கலைகழகத்தில்  அரசியல் தலையீடு இருப்பதாக துணைவேந்தர் சுரப்பா கூறியது தவறானது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Leave a Comment