சீனாவை இந்தியா பழிவாங்கும் -சிவசேனா எம்.பி  சஞ்சய் ராவத் 

பிரதமரின் தலைமையின் கீழ் சீனாவை இந்தியா பழிவாங்கும் என்று சிவசேனா எம்.பி  சஞ்சய் ராவத்  தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது. லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் .சீன ராணுவம் தரப்பில்  அதிகார்பூர்வ தகவல் தெரிவிக்கப்படவில்லை.இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சிவசேனா எம்.பி  சஞ்சய் ராவத்  கூறுகையில்,பிரதமரின் தலைமையின் கீழ் சீனாவை இந்தியா பழிவாங்கும் . சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எப்போது சரியான பதிலடி கொடுக்கப்படும்?   என்று கேள்வி எழுப்பியுள்ளார்.