இந்தியா தான் உலகக்கோப்பையை வெல்ல வந்திருக்கிறது நாங்கள் இல்லை- ஷகிப் அல்ஹஸன்

இந்தியா தான் உலகக்கோப்பையை வெல்ல வந்திருக்கிறது நாங்கள் இல்லை என்று வங்கதேச கேப்டன் ஷகிப் அல்ஹஸன் தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குரூப் 2 வில் இடம்பெற்ற இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் நாளை மோதுகின்றன.

புள்ளிப்பட்டியலைப் பொறுத்தவரை இந்தியா 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், வங்கதேசம் 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 4 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் மூன்றாம் இடத்திலும் இருக்கிறது.

இந்தியா-வங்கதேசம் போட்டியை முன்னிட்டு வங்கதேச கேப்டன் ஷகிப் அல்ஹஸன் ஒரு வினோதமான கருத்தை தெரிவித்துள்ளார். இந்தியா தான் உலகக்கோப்பையை வெல்ல வந்திருக்கிறது நாங்கள் உலகக்கோப்பையை வெல்ல வரவில்லை. மேலும் இந்தியா தான் உலகக்கோப்பையை வெல்லும் விருப்ப அணியாக இருக்கிறது.

நாங்கள் இந்தியாவை தோற்கடித்தால் அது வருத்தமாக இருக்கும். இருந்தும் நாங்கள் அந்த வருத்தத்தை உருவாக்க முயற்சி செய்வோம் என்று ஷகிப் அல்ஹஸன் தெரிவித்தார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment