சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் – அமைச்சர் ஐ.பெரியசாமி

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். சுய உதவி குழுக்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் கடன் உதவி வழங்கப்பட உள்ளது என்றும் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார் எனவும் கூறினார்.

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ளாட்சி கிராம சபை மற்றும் மாநகராட்சி பேரூராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் திண்டுக்கல் மாநாகராட்சிக்கு உட்பட்ட 33-வது வார்டு மேற்கு மிருகநாதபுரம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இவ்வாறு தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment