புரட்டி எடுத்த வீரர்கள்! வாழ்த்த வார்த்தையில்லை!படைதளபதி பெருமித விருது!

சீனப் படையினருடன் போராடிய ஐந்து இந்திய ராணுவ வீரர்களுக்கு அண்மையில் இராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே ‘பாராட்டு வாழ்த்து  அட்டைகள்’ வழங்கியதுடன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டதாக ராணுவ வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனா-இந்தியா இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்சணையில் சீன ராணுவத்தினை எதிர்கொண்டு இந்திய வீரர்களுக்கு முன்மாதிரியான துணிச்சலையும், தைரியத்தையும் வெளிப்படுத்தியதற்காக  படைவீரர்கள் 5 பேருக்கு விருது வழங்கப்பட்டதாகவும் ஆனால் இந்திய இராணுவம் அந்த ஐந்து வீரர்களைப் பற்றியோ அல்லது அவர்களின் பிரிவுகளைப் பற்றியோ எந்த விவரத்தினையும் வெளியிடவில்லை ஆனால் விருதும்,பாராட்டினையும் ராணுவப் படைதளபதி வழங்கியதாக மட்டும் தகவல் கசிந்துள்ளது.

இது குறித்து வெளியான தகவல்:கிழக்கு லடாக்கின் பாங்கோங் ஏரி மற்றும் கால்வான் பள்ளத்தாக்கில் இரண்டு தனித்தனியாக சீனப் படையினருடன் போராடிய 5 இந்திய ராணுவ வீரர்களுக்கு அண்மையில் இராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே தனது’பாராட்டுக்களையும் அதனோடு வாழ்த்து  அட்டைகளையும்’ வழங்கினார். சீன ராணுவ வீரர்களைக் கையாள்வதில் முன்மாதிரியான துணிச்சலையும் தைரியத்தையும் வெளிப்படுத்தியதற்காக வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது என்று அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோளிட்டு பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

இந்தியா-சீனா எல்லைப் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு இராணுவத் தயார் நிலையை மறுஆய்வு செய்வதற்காக லடாக்கிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள ஜெனரல் நாரவனே, கிழக்கு லடாக்கில் ஒரு முன்னோக்கி இடத்தில் படையினருக்கு இந்த விருதினை வழங்கினார். பாங்கோங் ஏரி பகுதி மற்றும் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல்களின் போது சீன ராணுவ வீரர்களை எதிர்கொண்டு வீரமாக எதிர்த்தோடு மட்டுமின்றி அவர்களை புரட்டி எடுத்தர்காகவும் களத்தில் துணிச்சலாக போராடியதற்காகவும் 5 இந்திய ராணுவ வீரர்களுக்கு இராணுவப் படைத் தலைவர் ‘பாராட்டு  மற்றும் விருது  வழங்கியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் விருது அளிக்கப்பட்ட 5 வீரர்களின் அடையாளம் அல்லது அவர்களின் பிரிவுகளைப் பற்றி இராணுவம் எந்த விவரங்களையும் வெளியிட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha