#Cricket Breaking: பந்துவீச்சில் மாஸ் காட்டிய அஸ்வின்.. 134 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து!

இரண்டாம் நாள் ஆட்டத்தில் 59 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி, 9 விக்கெட்கள் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்துள்ளது.

ind vs eng இரண்டாம் டெஸ்ட்:

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி, சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 88 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் அடித்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, 95.5 ஓவர்களில் தனது அனைத்து விக்கெட்டையும் இழந்து 329 ரன்கள் அடித்தது.

இரண்டாம் நாள் ஆட்டம்:

இன்றைய ஆட்டத்தில் ரிஷப் பண்டை தவிர மற்ற வீரர்கள் சரியாக ஆடவில்லை. அக்சர் 5 ரன்கள், இஷாந்த் மற்றும் குல்தீப் டக் அவுட், சிராஜ் 4 மட்டுமே எடுத்ததால் இந்திய அணி, 95.5 ஓவர்களில் தனது அனைத்து விக்கெட்டையும் இழந்து 329 ரன்கள் மட்டுமே அடித்தது. களத்தில் பண்ட் 58 ரன்களுடன் இருந்தார். பந்துவீச்சை பொறுத்தளவில் மொயீன் அலி தலா 4 விக்கெட்டுகளையும், ஸ்டோன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

மேலும் படிக்க: ரோஹித் சர்மா அடித்த அந்த 4! “Yes boy” என கத்திய கோலி.. வைரலாகும் வீடியோ!

இதனையடுத்து தனது முதல் இன்னிங்க்ஸை இங்கிலாந்து அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ் – டொமினிக் சிப்லி களமிறங்கினார்கள். முதலாம் ஓவரிலே ரோரி பர்ன்ஸ் தனது விக்கெட்டை இழந்தார். பின், 16 ரன்களில் டொமினிக் சிப்லி வெளியேறினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட், 6 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.

ind vs eng

பின்னர், 9 ரன்களில் லாரன்ஸ் வெளியேற, அதனைதொடர்ந்து 18 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் வெளியேறினார். 23.2 ஆம் ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்து 52 ரன்கள் மட்டுமே அடித்தது. 22 ரன்கள் எடுத்து ஆலி போப் வெளியேற, அவரைதொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி, 6 ரன்களிலும், ஒல்லி ஸ்டோன் 1 ரன் மட்டுமே எடுத்தார்.

இறுதியாக 59.5 ஓவரில் இங்கிலாந்து அணி, தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 134 ரன்கள் அடித்தது. இதனால் இந்திய அணி, 195 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் அஸ்வின் தலா 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அவரைதொடர்ந்து அக்ஸர் படேல் மற்றும் இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்கள்.