இன்றைய அரசியல் சூழலில் அதிமுக போட்டியிடுவது தான் சரியாக இருக்கும் – ஜெயக்குமார்

இன்றைய அரசியல் சூழலில் அதிமுக போட்டியிடுவது தான் சரியாக இருக்கும் என ஜெயக்குமார் பேட்டி. 

பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்றும், அதிமுக போட்டியிட உள்ளதாகவும் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ‘ஜி.கே.வாசனின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இன்றைய அரசியல் சூழலில் அதிமுக போட்டியிடுவது தான் சரியாக இருக்கும். இரட்டை இலை சின்ன விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை, நிச்சயம் இரட்டை இலையில் தான் போட்டியிடுவோம் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment