தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று  முதல் முக‌க்கவசம் அணிவது கட்டாயம் – மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று  முதல் முக‌க்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது.ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில்  கொரோனா வைரஸ் காரணமாக 1,596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவில் இருந்து  குணமடைந்தோர் எண்ணிக்கை  635 ஆக உள்ளது.  பலி எண்ணிக்கை 18 ஆக  உள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 27 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது,இந்நிலையில்  தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று  முதல் முக‌க்கவசம் அணிவது கட்டாயம் என்று  ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.