கடந்த 24 மணிநேரத்தில் 163 பேருக்கு கொரோனா பாதிப்பு.! மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு.!

கடந்த 24 மணிநேரத்தில் 163 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது வெகுவாக குறைந்துவிட்டது. தற்போது அண்டை நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டும் தற்போது மாநில அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆனால், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.

 இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகள் பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது . இதில் 163 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சையில் 3,380 பேர் இருக்கின்றனர். 9 பேர் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment