வீரம் செறிந்த தமிழர் மரபில் ஒண்டிவீரன் அவர்களின் பெயர் என்றும் நினைவுகூரப்படும் – மு.க.ஸ்டாலின்

வீரம் செறிந்த தமிழர் மரபில் ஒண்டிவீரன் அவர்களின் பெயர் என்றும் நினைவுகூரப்படும்.

விடுதலை போராட்ட வீரரான ஒண்டி வீரன், புலித்தேவர் படையில் படைவீரராகவும், படைத்தளபதியாகவும் இருந்தவர். இவர், அருந்ததியர் பிரிவைச்சார்ந்த விடுதலைப்போராட்ட வீரர் ஆவார். இந்நிலையில், இன்று அவரது 250-வது நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.

இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாய் விளங்கி, ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த மாவீரன் ஒண்டிவீரன் அவர்களது 250-ஆவது நினைவுநாள்! வீரம் செறிந்த தமிழர் மரபில் ஒண்டிவீரன் அவர்களின் பெயர் என்றும் நினைவுகூரப்படும்.’ என்று பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.