கோடநாடு வழக்கில் வி.சி.ஆறுகுட்டியிடம் 3-வது முறையாக விசாரணை..!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., வி.சி.ஆறுகுட்டியிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்த கோடநாடு கொலை, கொள்ளை, தொடர்பாக சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ள  நிலையில், இவ்வழக்கு சம்மந்தமாக பல்வேறு திருப்பங்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், கோவை தொழிலதிபர் மணல் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் ரிசார்ட் உரிமையாளர் நவீன் பாலாஜியிடம் தனிப்படை போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்திய நிலையில், தற்போது அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., வி.சி.ஆறுகுட்டியிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடநாடு வழக்கில் வி.சிஅறுகுட்டி 3வது முறையாக விசாரணைக்கு ஆஜர் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment