தமிழகம், புதுச்சேரியில் நவம்பர் 19 முதல் 21ஆம் தேதி வரை மழை பெய்யும் …! சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் நவம்பர் 19 முதல் 21ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தை கடந்துசென்ற கஜா புயல் தென்கிழக்கு அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது . காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று 12 மணி நேரத்தில் அரபிக்கடலில் புயலாக மாற வாய்ப்பு உள்ளது.எனவே  தமிழகம், புதுச்சேரியில் நவம்பர் 19 முதல் 21ஆம் தேதி வரை மழை பெய்யும்.வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment