#CoronaUpdate:மீண்டும் உயர்ந்த கொரோனா – மத்திய சுகாதாரத்துறை!

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 975 பேருக்கு கொரோனா பாதிப்பு;4 பேர் கொரோனாவுக்கு பலி.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 949 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 975 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,40,947 ஆக பதிவாகியுள்ளது.

குணமடைந்தவர்கள்;பலி எண்ணிக்கை:

அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரே நாளில் 796 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.மேலும், இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,25,07,834 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்,கொரோனாவுக்கு நேற்று 6 பேர் இறந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 4 ஆக குறைந்துள்ளது.இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,21,747 ஆக பதிவாகியுள்ளது.

சிகிச்சையில் உள்ளவர்கள்-செலுத்தப்பட்ட தடுப்பூசி:

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 11,366 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நாட்டில் இதுவரை 1,86,38,31,723 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரே நாளில் 6,89,724 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.