சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இன்று முதல் 5 நாட்களுக்கு ரயில் சேவை மாற்றம்..!

தாம்பரம் – செங்கல்பட்டு பிரிவில் உள்ள கூடுவாஞ்சேரியில் பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று முதல் வருகின்ற 15-ம் தேதி வரை ரயில் சேவையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளனர்.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை அதிகாலை 3.55, 04.35 , 05.15 ,05.50 காலை 06.05 ,06.43 மாலை 05.18  இரவு 08.01, 09.18 மணிக்கு இயங்கி வந்த மின்சார ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை மட்டுமே இயங்க உள்ளது.
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை அதிகாலை 03.55 ,04.35 ,04.40 காலை 06.40 ,06.55 இரவு 07.25, 10.15 , 11.10 மணிக்கு இயங்கி  வந்த மின்சார ரயில்கள் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைமட்டுமே இயங்க உள்ளது.
மேலும் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை காலை 08.40 மணிக்கு இயங்கப்பட்டு வந்த செமி பாஸ்ட் மின்சார ரயில் செங்கல்பட்டு -கடற்கரை இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளது.
 

author avatar
murugan