நான் யாரையும் காதலிக்க தயாராக இல்லை! தளபதி பட நடிகை அதிரடி!

நடிகை இலியானா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஆண்ட்ரு என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களது காலுக்குள் பிரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலயில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இனிமேல் நான் யாரையும் காதலிக்க மாட்டேன். இப்பொது மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். என் வாழ்க்கை முறையை மாற்றி புதிய வழியில், வாழப் போகிறேன். உங்கள் மீது அக்கறையோடு இருங்கள். வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது.
சில நேரம் மற்றவர்களை நம்ப வேண்டி வரும். அந்த நேரத்தில் அவர்கள் மீது சார்ந்து இருக்க நினைப்போம். ஆனால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் நம்மோடு இருப்பார்களா என்பது தெரியாது. வாழ்க்கையில் எது நடந்தாலும், நமக்காக இருப்பது நாம் தான். எனவே, என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நன்றாக வைத்துக் கொள்கிறேன். இது நமது வாழ்க்கை. நாம் தான் பாதுகாக்க வேண்டும் என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.