பிரச்சாரம் செய்ய விரும்பினால் கட்சி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வேட்பாளர்கள் தவிர மற்றவர்கள் பிரச்சாரம் செய்ய தடை விதித்து வழிகாட்டு வெளியீடு.

காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலுக்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அக்.17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால்,  காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அக்.8-ஆம் தேதிக்குள் இருவரும் வாபஸ் பெறவில்லை என்றால், அக்.17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவு என கேரள காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதுமட்டுமல்லாமல், கார்கேவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, சசிதரூர் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் அதிருப்தி குழுவான ஜி23 தலைவர்களும் அவரை மறுத்துள்ளனர். இந்த மையத்தில் சொந்த மாநிலமான சசிதரூரை ஆதரிக்காததால் கார்கேவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த நிலையில், அக்.17-ஆம் தேதி நடைபெறும் காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலுக்கான முக்கிய வழிகாட்டுதல்களை அக்கட்சியின் தேர்தல் குழு வெளியிட்டுள்ளது.

அதில், பிரதேச தேர்தல் அதிகாரி (பிஆர்ஓ) அந்தந்த பிசிசிகளின் வாக்குப்பதிவு அதிகாரியாக இருப்பார். வாக்குச் சாவடிகளில் சட்டம் – ஒழுங்கை பேணுவதற்கும், தேர்தல் நியாயமாக நடைபெறுவதைப் பார்ப்பதற்கும் அவர் பொறுப்பாவார்.  மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தனிப்பட்ட முறையில் போட்டியிடுகின்றனர்.

எனவே, பிரதிநிதிகள் தங்களின் விருப்பப்படி, வாக்குச் சீட்டு மூலம் அவர்களில் யாரையும் தேர்வு செய்ய சுதந்திரமாக உள்ளனர். AICC பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், பிசிசி தலைவர்கள், CLP தலைவர்கள், முன்னணி அமைப்பின் தலைவர்கள், துறைகளின் தலைவர்கள் மற்றும் அனைத்து அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவோ எதிராகவோ பிரச்சாரம் செய்யக்கூடாது.

அவர்கள் எந்த வேட்பாளரையும் ஆதரித்து பிரச்சாரம் செய்ய விரும்பினால் கட்சி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அவர்கள் எந்த வேட்பாளரையும் ஆதரிக்க விரும்பினால், அவர்கள் முதலில் தங்கள் வகித்து வரும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், அதன் பிறகு அவர்கள் பிரச்சார செயல்பாட்டில் பங்கேற்க வேண்டும். இதனால், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வேட்பாளர்கள் தவிர மற்றவர்கள் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பிசிசி தலைவர்களும் அந்தந்த மாநிலங்களுக்கு தங்கள் வருகையின் போது வேட்பாளர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். பிசிசி பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்த விரும்பும் வேட்பாளருக்கு பொது அறிவிப்புக்காக கூட்ட அரங்கு, நாற்காலிகள் மற்றும் பிற உபகரணங்களை வழங்க ஏற்பாடு செய்வார்கள். இருப்பினும், பி.சி.சி தலைவர் அவர்களின் தனிப்பட்ட நிலையில் அத்தகைய கூட்டத்தை அழைக்க முடியாது. கூட்டத்தை ஏற்பாடு செய்வது முன்மொழிபவர் அல்லது போட்டியிடும் வேட்பாளர்களின் ஆதரவாளர்களின் பணியாகும்.

தேர்தல் நாளன்று, தேர்தல் சின்னம் பொருத்திய வாகனங்களை பயன்படுத்த கூடாது. மேலும், தேர்தல் பிரச்சார துண்டு பிரசுரங்களையோ அல்லது வேறு எந்த வகையான பிரசுரங்களையோ தேர்தல் நாளில் பயன்படுத்தக்கூடாது. இந்த நடைமுறைகளை மீறுபவர்களின் வேட்புமனுக்கள் செல்லாததாக்கி, அவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். எந்தவொரு வேட்பாளருக்கும் எதிராக தவறான பிரச்சாரம் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். தேர்தல் செயல்முறையின் உணர்திறன் எந்த விலையிலும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

CongressPresidentPolls

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment