நம் உடலில் 10 முதல் 15 நிமிடங்கள் சூரிய ஒளி பட்டால், கொரோனா வராது – மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர்.!

மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே சமீபத்தில் பேசியபோது, இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். அதில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு தான், கொரோனா உள்ளிட்ட வைரஸ் பாதிப்புகள் அதிகம் இருக்கும் என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என தெரிவித்தார்.

இதையடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன்  ‘வைட்டமின் – சி’ சூரிய ஒளியில் அதிகம் உள்ளது என்றும் பகல் 11 லிருந்து பிற்பகல் 2 மணி வரை, சூரிய வெளிச்சம் பிரகாசமாக இருக்கும் என கூறினார். பின்னர் அந்த நேரத்தில், நம் உடலில் சூரிய ஒளி பட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் கொரோனா உள்ளிட்ட எந்த வைரஸ் பாதிப்பும் ஏற்படாது என்று குறிப்பிட்டார். மேலும் நம் உடலில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை சூரிய ஒளி பட்டால் கொரோனா உள்ளிட்ட எந்த வைரசும் நம்மை பாதிக்காது என்றும் இந்த விஷயத்தை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்