“நிர்பயா வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டது” – மோடி ட்விட்டரில் கருத்து .!

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு  இன்று அதிகாலை 05.30-க்குமணிக்கு  தூக்கு தண்டனையை நிறை வேற்றப்பட்டது. இந்தத் தூக்கு தண்டனையை பவன் ஜல்லாட் என்பவர் நிறைவேற்றினார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தூக்கு தண்டனை குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில் ,டெல்லி நிர்பயா வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டது. மேலும் அதில்  நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பையும் , மரியாதையையும் உறுதி செய்வது மிக முக்கியம் . பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

author avatar
murugan