அவசியம் ஏற்பட்டால் நானும் ரஜினியும் இணைவோம்- கமல்ஹாசன் அதிரடி

அவசியம் ஏற்பட்டால் நானும் ரஜினியும் இணைவோம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ரஜினி சொன்ன அதிசயம் உண்மைதான்.நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம் என்று  கமல்ஹாசன் தெரிவித்தார்.