INDvBAN : டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு.! பீல்டிங்கிற்கு தயாரான இந்திய அணி.! 

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 17வது போட்டி இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணியும் மோத உள்ளன. இன்றைய போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் சரியாக 2 மணிக்கு துவங்க உள்ளது .

இந்த போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி பந்துவீச களமிறங்க உள்ளது. ஏற்கனவே 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளிலும் வெற்றியை கண்ட இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று முதலிடம் செல்லும் முனைப்பில் விளையாட உள்ளது.

அதே போல 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி , 2 தோல்வி என்ற நிலையில் உள்ள வங்க தேச அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று உலக கோப்பை தொடரில் அடுத்தகட்ட நகர்வுக்கு செல்ல தீவிரமாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா சார்பாக கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.

பங்களாதேஷ் அணி சார்பாக  கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையில், லிட்டன் தாஸ், தன்சித் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், தௌஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம்(விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, நசும் அகமது, ஹசன் மஹ்மூத், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம் ஆகியோர் விளையாட உள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.