அவர் மட்டும் இல்லனா தற்கொலை பண்ணிருப்பேன்! மும்தாஜ் சொன்ன பகீர் தகவல்!

Mumtaj : அண்ணன் மட்டும் இல்லை என்றால் நான் தற்கொலை செய்து இருப்பேன் என நடிகை மும்தாஜ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தமிழ் , தெலுங்கு, மலையாள ஆகிய மொழிகளில் ஒரு காலத்தில் கலக்கு கலக்கு என்று கலக்கியவர் நடிகை மும்தாஜ். இவர் விஜய்யுடன் இணைந்து ஆடிய கட்டிபுடி கட்டிப்புடி டா பாடல் இன்னும் வரை பலருடைய பேவரைட்டாக இருக்கிறது என்று கூட சொல்லலாம். ஆனால் , நல்ல நடிப்பு திறமை இருந்தும் கூட இவருக்கு பட வாய்ப்புகளே வரவில்லை. கடைசியாக தமிழில் ராஜாதி ராஜா படத்தில் தான் நடித்து இருந்தார்.

அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் மும்தாஜிற்கு பெரிய அளவில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில், பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருக்கும் நடிகை மும்தாஜ் தனது வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை வேதனையுடன் மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய மும்தாஜ் ” ஒரு முறை எனக்கு குறுக்கு மிகவும் அதிகமாக வலித்தது. அந்த வலியை என்னால் வார்த்தைகளால் கூறவே முடியவில்லை.

அந்த வலி ஏற்பட்ட போது என்னால் என்னுடைய முதுகை கூட அசைக்கக்கூட முடியாத அளவிற்கு வலி ஏற்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அந்த வலியை தாங்க முடியாமல் அனுபவித்தேன்.. அதன்பிறகு. மருத்துவமனையில் ஆராய்ச்சி செய்து, ஆட்டோ இம்யூன் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டது எனக்கு தெரிய வந்தது. இந்த நோயினால் என்னுடைய உடலில் எங்கு எலும்பு மூட்டுகள் இருந்தாலும் பயங்கர வலி ஏற்பட்டது.

அந்த நேரங்களில் எல்லாம் என்னால் நிற்கவோ. உடலை அசைக்கவோ முடியாமல் நரகத்தில் இருந்தது போல உணர்ந்தேன். இதனால் ரொம்பவே மனா உளைச்சலுக்கும் ஆள் ஆனேன். ஒரு முறை இதனால் ரொம்பவே நொந்துபோய் இரண்டு மணி நேரம் அழுதுகொண்டே இருந்தேன். பிறகு இதில் இருந்து என்னுடைய அண்ணன் தான் என்னை வெளியே கொண்டு வந்தார். அவர் மட்டும் இல்லை என்றால் தற்கொலை செய்து இருப்பேன்” எனவும் மும்தாஜ் கூறியுள்ளார். முதுகு வலிக்கு மும்தாஜ் தற்கொலை செய்ய துணிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.