நான் நிரபராதி என நிரூபித்து மீண்டும் அமைச்சராகுவேன் – கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா..!

ஒப்பந்தக்காரர் சந்தோஷ் பாட்டில் என்பவரை தற்கொலைக்கு தூண்டியதாக கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்ப மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈஸ்வரப்பா இன்று மாலை கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கவுள்ளார்.

அதற்கு முன்னதாக தொண்டர்களை சந்தித்து பேசிய அவர், என் மீதான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கையில் நான் அமைச்சராக தொடர்ந்தால் அது என்னை பாதிக்கும் என்பதால் தான் ராஜினாமா செய்கிறேன். நான் நிரபராதி என்பதை நிரூபித்து, மீண்டும் அமைச்சராகுவேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal