ஒபாமாவிற்கு பின் ஸ்டாலினை தான் நான் ஒரு சிறந்த தலைவராக பார்க்கிறேன்…! வைகோ

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, மாதத்திற்கு இரண்டு முறை மக்களை சந்தித்து குறைகளை கேட்பார். ஒபாமாவிற்கு பின் ஒரு சிறந்த தலைவராக ஸ்டாலினை தான் நான் பார்க்கிறேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் ஸ்டெர்லைட் விவகாரத்தில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற அன்று இரவு நான் அங்கு சென்று பார்த்தேன். அவர்களுடன் இருந்தவன் என்ற முறையில், அது மிகவும் வேதனையான ஒரு சம்பவம். 13 பேரை காவல்துறையை ஏவிவிட்டு சுட்டுக் கொன்ற கொலைகார அரசு எடப்பாடி அரசு என்று விமர்சித்தார். மேலும் சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரையும் கொன்ற கொலைகார அரசுதான் என்று சாத்தான் குளம் சம்பவத்தையும் நினைவுபடுத்தினார்.

மேலும், தமிழகத்தின் பெண்கள் நிலையை குறித்து கடுமையாக விமர்சித்த அவர் பொள்ளாச்சி பாலியல் குற்றம் குறித்து எடுத்துக்காட்டினார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, மாதத்திற்கு இரண்டு முறை மக்களை சந்தித்து குறைகளை கேட்பார். ஒபாமாவிற்கு பின் ஒரு சிறந்த தலைவராக ஸ்டாலினை தான் நான் பார்க்கிறேன் புகழாரம் சூட்டியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.