ஹெச்.ராஜா யார் என்பதே எனக்கு தெரியாது : கார்த்திக் சிதம்பரம்

  • நானும் எனது தந்தை பா.சிதம்பரமும் தவறேதும் செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
  • ஹெச்.ராஜா யார் என்பதே எனக்கு தெரியாது என்று கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சில கட்சி தலைவர்கள் மற்ற கட்சிகளை தொடர்ந்து விமர்சனம் செய்யக் கூடிய சம்பவம் தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில், பா.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் அவர்கள் கூறுகையில், ” நானும் எனது தந்தை பா.சிதம்பரமும் தவறேதும் செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும், அரசுக்கு எதிராக கேள்வி கேட்பதால் தந்தை மீது மத்திய அரசு போய் வழக்குகளை போட்டு வருகிறது எனும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், வாரிசு அரசியல்வாதி எனக் கூறுவது தரு என்றும், நான் தற்போது சந்திக்க உள்ளது 11 ஆவது தேர்தல் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் ஹெச்.ராஜா யார் என்பதே எனக்கு தெரியாது என்று கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment