கேப்டனாகி பெற்ற முதல் வெற்றியை மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன் – ரவீந்திர ஜடேஜா நெகிழ்ச்சி!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடர் 22 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய நிலையில், இந்த ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து நான்கு தோல்விக்கு பின் சென்னை அணிக்கு முதல் வெற்றி இது தான். இந்நிலையில் இது குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா அவர்கள், கேப்டனாகிய பின் பெற்ற முதல் வெற்றி எப்போதும் சிறப்பானது. எனவே என் முதல் வெற்றியை எனது மனைவிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

author avatar
Rebekal