என்னை நம்பி வரும் இயனர்களின் படங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன் : நடிகை ஸ்ரீபிரியங்கா

நடிகை ஸ்ரீ பிரியங்கா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை ஆவார். இவர் தமிழில், கங்காரு, வந்தா மல, கோடை மழை போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் மிக மிக அவசரம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 18-ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படம் குறித்து அவர் கூறுகையில், ‘ போலீஸ் கதாபாத்திரம் என்பதால் மட்டுமல்ல, அதன்மூலம் பெண்களுக்கு ஒரு செய்தி சொல்லக்கூடிய கதாபாத்திரம் என்பதாலும், பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரம் என்பதாலும் தான் நான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
மேலும், சின்ன சின்ன படங்கள் தானே என்று தயவு செய்து ஒதுக்காதீர்கள். அதில் தான் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும். என்னை தேடி வரும் சில படவாய்ப்புகளை நிறுத்தி வைத்துள்ளேன். ஸ்ரீபிரியங்காவை நடிக்க வைக்கலாம் என என்னை நம்பி வரும் இயக்குனர்களின் படங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.