நான் ராஜபக்சேக்களின் நண்பன் இல்லை.. மக்களின் நண்பன்.! ரணில் விக்ரமசிங்கே அதிரடி கருத்து.!

நான் ராஜபக்சேக்களின் நண்பன் இல்லை. நான் மக்களின் நண்பன் – இலங்கை புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் சூழல் ஏற்பட்டது. ராஜபக்சேக்களின் அரசை எதிர்த்து மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினமா செய்யாமலேயே இலங்கையை விட்டு தப்பிச்சென்றார். அதன் பின்னர் கடிதம் மூலம் அனுப்பி அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பின்னர், இடைக்கால பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டு, அதிபர் தேர்தல் நடைபெற்று, இலங்கை புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். இதுவரை 6 முறை பிரதமராக இருந்த ரணில் முதன் முறையாக அதிபராகி உள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் இலங்கை நாடாளுமன்றத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது மக்கள் பாராளுமன்றத்துக்கு வெளியே ரணில் விக்ரம்சிங்கிற்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.

இந்நிலையில் அதிபராக பதவியேற்ற பிறகு ரணில், ‘ நான் ராஜபக்சேக்களின் (கோத்தபய, ராஜபக்சே, பசில் ) நண்பன் இல்லை. நான் மக்களின் நண்பன் ‘ என தனது உறுதிமொழியை தெரிவித்தார்/

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment