விலங்குகளுக்கு எதிராக கொலைவெறி தாக்குதல் நடத்தும் மனிதர்கள்! மட்டனில் வெடி வைத்து கொல்லப்பட்ட நரி!

மட்டனில் வெடி வைத்து கொல்லப்பட்ட நரி. விலங்குகளுக்கு எதிராக தொடரும் சித்திரவதைகள்.

கடந்த சில நாட்களாகவே விலங்குகளுக்கு எதிராக மனிதர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக,  அன்னாசி பழத்தில் வெடி வைத்து, கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அதனை தொடர்ந்து, சிறுத்தை, மாடு மற்றும் நாய் என விலங்குகளுக்கு சித்திரவதைகள் தொடர்ந்த நிலையில், தற்போது திருச்சியில்,ஜீயபுரம் பகுதியில் வயல்களை வன உயிரினங்கள் சேதப்படுவதை தடுப்பதற்காக வன அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அங்கு  கும்பல் மீது, அவர்களுக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து, அவர்கள் வைத்திருந்த பையை  செய்தனர். அந்த சோதனையின் போது, அந்த பைக்குள் இறந்த நரியின் உடல் இல்லை=ருந்தும், அந்த நரிக்கு மட்டனில் வெடி வைத்து கொல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.