தமிழ் உணர்வை விட மனிதநேயம் மேலானது.! விஜய் சேதுபதி மகளின் மிரட்டல் விவகாரம் குறித்து ராஜ்கிரண்.!

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்ததை கண்டித்து நடிகர் ராஜ்கிரண் கூறியதாவது,

தமிழ் உணர்வும், நல்ல பண்புமுடைய அவருக்கு என்ன அழுத்தங்களோ, 800 படத்தில் நடிக்க சம்மதித்ததற்கு இப்பொழுது, அதிலிருந்து விலகிய சம்பவத்தை வைத்து, அவரின் மகள் மீது வன்மம் காட்டுவது, எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இது தமிழனின் பண்பும் அல்ல.

தமிழ் உணர்வு என்று,வசனம் பேசினால் மட்டும் போதாது, தமிழ்ப்பண்போடு வாழ்ந்து காட்ட வேண்டும். தமிழ் உணர்வு என்பது அவசியம் தான். அதற்காக தரம் தாழ்ந்து, அவரையோ, அவர் குடும்பத்தினரையோ விமர்சிப்பதென்பது ஈனத்தனமானது. தமிழ் உணர்வை விட, மனித நேயம் மேலானது என்று தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.