உங்கள் பர்ஸில் இதனை வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டும்! பணம் கொழிக்கும்!

  • மணிபர்ஸ் எப்படி இருந்தால் பணம் கொட்டும் என சில நடைமுறைகள் இருக்கிறது. 
  • பர்ஸ் கருப்பு நிறத்தில் இருக்க கூடாது. பின் பாக்கெட்டில் வைக்க கூடாது. ஆயுதம் எதுவும் இருக்க கூடாது.

தற்காலத்தில் பெரும்பாலானோர் தங்கள் உழைப்பை விட அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து வாழ்கின்றனர். கடுமையான முயற்சி கண்டிப்பாக அதிர்ஷ்டத்தை தேடி தரும். இருந்தாலும், சில நேரம் நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் ஆன்மிக ரீதியாக அதிர்ஷ்டத்தை வரவழைக்கும். அப்படி நமது அபர்ஸின் மூலம் பணம் கொழிக்கும். அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் சில ஆன்மீக யோசனைகளை பார்க்கலாம்.

நாம் வாங்கும் பர்ஸ் கருப்பு நிறத்தில் இருக்கவே கூடாது. கருப்பை தவிர மற்ற நிறங்களில் வாங்கி கொள்ளலாம். அதில் ஸ்வஸ்திக் அல்லது லட்சுமி கடாட்சம் உள்ள புகைப்படங்களை வைக்க வேண்டும். பர்ஸை திறந்தவுடன் லட்சுமி முகம் தெரியவேண்டும். குபேர எந்திரம் பர்ஸில் வைக்கவேண்டும்.

கிராம்பு, சோம்பு, பட்டை, ஏலக்காய், பச்சை கற்பூரம் ஆகியவை கலந்த ஒரு சிறிய மூட்டையை பர்ஸில் வைக்க வேண்டும். இந்த வாசம் லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும். பர்ஸில் அரச இலையை வைப்பதன் மூலம் உங்கள் குறிக்கோள் நிறைவேறும். நீங்கள் மிகவும் அமைதியாகவும் இருக்க முடியும். ஆயுதங்களை பர்ஸில் வைக்க கூடாது. பச்சை நிறத்தில் உள்ள நோட்புக் வைத்துக்கொள்ளலாம். பச்சை நிறத்திற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது.

லட்சுமி கடாட்சம் இருக்கும் பர்ஸை பின்பக்கத்தில் வைக்கவே கூடாது. அது நமது உடலுக்கும் நல்லது இல்லை. நம் அதிர்சட்டத்திற்கும் நல்லதில்லை.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.