வரும் 10,11,12 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைக்கு விடுமுறை – சபாநாயகர் அப்பாவு

வரும் 10,11,12 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்படுவதாகவும் சபாநாயகர்  அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கடந்த 13ம் தேதி சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இந்த சட்டப்பேரவை கூட்டமானது வரும் 13-ம் தேதியுடன் நிறைவடைய  உள்ளது.

இந்நிலையில், வரும் 8-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் காலை, மாலை என இருவேளைகளிலும் சட்டப்பேரவை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அதன்படி, 8-ஆம் தேதி காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் சட்டப்பேரவை நடைபெறும் என்றும், விநாயகர்  மறுநாளான 11-ஆம் தேதி சனிக்கிழமை பேரவை அலுவல் கிடையாது என்றும், வரும் 10,11,12 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்படுவதாகவும் சபாநாயகர்  அறிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.