ஜனவரி 8 முதல் 16 வரை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!

ஜனவரி 8 முதல் 16 வரை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெலங்கானா முதல்வர் அறிவிப்பு.

தெலுங்கானா மாநிலத்தில் அனைத்து கல்வி நிலையங்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார்.

ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை மையப்படுத்தி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனாவை சமாளிக்க அனைத்து விதமான ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், தெலுங்கானா மாநிலத்தில் தற்போதுள்ள 99% அரசு மருத்துவமனைகள் தங்கள் படுக்கைகளை ஆக்ஸிஜன் படுக்கைகளாக மாற்றியுள்ளன என்றும் தற்போது லாக்-டவுன் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்