ஐபிஎல் போட்டிகளில் 5,000 ரன்களை கடந்து ‘ஹிட் மேன்’ ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார்.
இன்று நடைபெறும் 13-வது ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் , லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றது. இப்போட்டி அபுதாபியில் உள்ள ஷேய்க் சையத் கிரிக்கெட் மைதானத்தில் ( Sheikh Zayed Stadium) நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல்பந்துவீச்சை தேர்வு செய்தார்.இந்நிலையில் பேட்டிங் செய்ய களமிரங்கியது மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் ஆடுகளத்தில் தனது அதிரடி ரன்வேட்டையில் 5,000 ரன்களை கடந்தார். 5,000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற சாதனையை தன்வசப்படுத்தி கொண்டார்.